கரோனாவுக்கு முன்பு பின்பற்றிய நேரப்படி, நாளை முதல் நாடாளுமன்ற கூட்டத்தொடர் வழக்கம்போல் கூடும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
கரோனா நோய்த்தொற்று காரணமாக நாடாளுமன்றத்தின் பட்ஜெட் கூட்டத்தொடருக்காக இரு அவைகளும் நேரம் மாற்றி அமைக்கப்பட்டு கூடியது.
இந்நிலையில், நாடாளுமன்ற உறுப்பினர்களின் கோரிக்கையை ஏற்று நாளை(செவ்வாய்க்கிழமை) முதல் மக்களவை மற்றும் மாநிலங்களவை, கரோனாவுக்கு முந்தைய நேரமான காலை 11 மணிமுதல் மாலை 6 மணிவரை கூடும் என அறிவிக்கப்பட்டுள்ளது.