தற்போதைய செய்திகள்

திமுக - காங்கிரஸ் தொகுதி உடன்பாட்டில் நாளை கையெழுத்து: தினேஷ் குண்டுராவ்

DIN

திமுக - காங்கிரஸ் இடையேயான தொகுதி உடன்பாடு நாளை காலை கையெழுத்தாகும் என காங்கிரஸ் பொறுப்பாளர் தினேஷ் குண்டுராவ் தெரிவித்துள்ளார்.

திமுக - காங்கிரஸ் இடையே தொகுதி பங்கீட்டில் இழுபறி நீடித்து வந்த நிலையில், இன்று இரவு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இல்லத்தில் காங்கிரஸ் மூத்த தலைவர்கள் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.

இந்த பேச்சுவார்த்தைக்கு பின் செய்தியாளர்களை சந்தித்த தினேஷ் குண்டுராவ் கூறியதாவது,

திமுகவுடன் நாளை காலை 10 மணிக்கு தொகுதி உடன்பாட்டில் கையெழுத்திடப்படும் எனத் தெரிவித்தார்.

இந்த சந்திப்பின்போது, காங்கிரஸ் மேலிடப் பொறுப்பாளர் தினேஷ் குண்டுராவ், காங்கிரஸ் மாநில தலைவர் கே.எஸ்.அழகிரி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சொன்னதைச் செய்த பாட் கம்மின்ஸ்!

‘அரசியல் சதி’: நீதிமன்றத்தில் கேஜரிவால் ஆஜர்!

கிரிக்கெட் கதையை இயக்கும் ஜேசன் சஞ்சய்?

கர்நாடகத்துக்கு போறீங்களா.. ஹாயர் பெனகல்லை தவறவிடாதீர்!

’ஸ்டார்’ கரீனா கபூர்!

SCROLL FOR NEXT