தொகுதி பங்கீடு குறித்து ஆலோசனை நடத்த நாளை வருமாறு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு, திமுக தரப்பில் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட கூட்டணி கட்சிகளிடம் தொகுதி பங்கீட்டை அனைத்து கட்சிகளும் இறுதி செய்து வருகின்றது.
திமுகவின் கூட்டணி கட்சியான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கேட்கும் இரட்டை இலக்கு தொகுதியை திமுக தர மறுப்பதால் தொடர்ந்து இழுபறி ஏற்பட்டு வருகின்றது.
இந்நிலையில், சென்னை அண்ணா அறிவாலயத்தில் நாளை காலை 3ஆம் கட்டப் பேச்சுவார்த்தைக்கு திமுக தரப்பில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.