பஞ்சாப் முதல்வர் கேப்டன் அமரீந்தர் சிங் வெள்ளிக்கிழமை மொகாலியில் உள்ள மருத்துவமனையில் கரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டார்.
நாட்டில் முன்களப் பணியாளர்களுக்கு கரோனா தடுப்பூசி செலுத்தும் பணி ஜனவரி 16-ஆம் தேதி தொடங்கியது. அதனைத் தொடர்ந்து 60 வயதுக்கு மேற்பட்ட மக்களுக்கு கரோனா தடுப்பூசி செலுத்தும் பணி நாடு முழுவதும் திங்கள்கிழமை தொடங்கியது.
அதனைத் தொடர்ந்து பல்வேறு தலைவர்களும் கரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டு வருகின்றனர். இந்நிலையில் பஞ்சாப் முதல்வர் கேப்டன் அமரீந்தர் சிங் வெள்ளிக்கிழமை மொகாலியில் உள்ள மருத்துவமனையில் கரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டார்.