மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் நாளை(மார்ச் 4) அரசு முறை பயணமாக வங்கதேசம் செல்கிறார்.
இதுகுறித்து மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் வெளியிட்ட செய்தியில்,
மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் நாளை வங்கதேச தலைநகரான டாக்கா செல்லவுள்ளார். இந்த பயணத்தின்போது, வங்கதேச பிரதமர் மற்றும் வெளியுறவுத்துறை அமைச்சரை சந்திக்கவுள்ளதாக தெரிவித்துள்ளனர்.