தமிழக சட்டப்பேரவை தேர்தலுக்கான தொகுதிப் பங்கீடு குறித்து அதிமுகவுடன் பாஜக மீண்டும் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளது.
தமிழக சட்டப்பேரவை தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணிக் கட்சிகள் தொகுதி பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். பாஜக தரப்பில் ஞாயிற்றுக் கிழமை இரவு மத்திய அமைச்சர் அமித்ஷாவுடன் முதல்வர் கே.பழனிசாமி மற்றும் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் சந்தித்து முதற்கட்ட பேச்சுவார்த்தை நடத்தினார்கள்.
இந்நிலையில், தற்போது சென்னையில் உள்ள தனியார் விடுதியில் மீண்டும் பேச்சுவார்த்தையை தொடங்கியுள்ளனர். அதிமுக தரப்பில் அமைச்சர்கள் தங்கமணி, வேலுமணி மற்றும் கே.பி.முனுசாமி, வைத்திலிங்கம் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.
பாஜக சார்பில் தமிழக தேர்தல் பொறுப்பாளரும், மத்திய அமைச்சருமான கிஷன் ரெட்டி, மாநில தலைவர் எல்.முருகன் உள்ளிட்டோர் ஆலோசனையில் ஈடுபட்டு வருகின்றனர்.