தற்போதைய செய்திகள்

முதல் நாளில் கரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட தலைவர்கள்

DIN

கரோனா தடுப்பூசி போடும் இரண்டாம் கட்டத்தின் முதல் நாளில் பிரதமர் மோடி உள்ளிட்ட அரசியல் கட்சிகளை சேர்ந்த தலைவர்கள் திங்கள்கிழமை தடுப்பூசி போட்டுக் கொண்டார்கள்.

நாடு முழுவதும் கரோனா தடுப்பூசி போடும் பணி முதற்கட்டமாக சுகாதாரப் பணியாளர்களுக்கு ஜனவரி 16 ஆம் தேதி முதல் தொடங்கப்பட்டது. பிப்ரவரி 26 வரை 1.40 கோடி சுகாதாரப் பணியாளர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டது.

இந்நிலையில், இன்று முதல் நாடு முழுவதும் 60 வயதுக்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசி போடும் 2ஆம் கட்டப் பணி தொடங்கப்பட்டுள்ளது.

இதையடுத்து, அரசியல் கட்சிகளை சேர்ந்த முக்கிய தலைவர் இன்று தடுப்பூசி போட்டுக் கொண்டார்கள்:

1.தில்லியில் பிரதமர் மோடி
2.மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா
3.சென்னையில் குடியரசு துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடு 
4.பிகார் முதல்வர் நீதிஸ் குமார்
5.ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக்
6.மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய் சங்கர்  
7.ராஜஸ்தான் மாநில ஆளுநர் கல்ராஜ் மிஸ்ரா
8.மத்திய அமைச்சர் ஜித்தேந்தர் சிங்
9.தேசியவாத காங்கிரஸ் கட்சி தலைவர் சரத் பாவர்

மேலும், நாளை மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன், கேரள சுகாதாரத்துறை அமைச்சர் சைலஜா உள்ளிட்டோர் தடுப்பூசி போட்டுக் கொள்ளவுள்ளார்கள்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நாமக்கல்: 78.16% வாக்குப்பதிவு!

மின் கம்பங்களால் பெரியகோயில் தேரோட்டத்தில் தாமதம்

பெங்களூருவில் இரட்டைக் கொலை: மகளை கொலை செய்த காதலனை கொன்ற தாய்

தஞ்சை பெரியகோயிலில் சித்திரைத் தேரோட்டம் கோலாகலம்!

ரைட்ஸ் நிறுவனத்தில் வேலை: பொறியியல் பட்டதாரிகளுக்கு வாய்ப்பு

SCROLL FOR NEXT