அசாம் சட்டப்பேரவைத் தேர்தலுக்காக காங்கிரஸ் கட்சி சார்பில் தேர்வுக் குழு திங்கள்கிழமை அமைக்கப்பட்டுள்ளது.
அசாம் மாநில சட்டப்பேரவைத் தேர்தல் மார்ச் 27ஆம் தேதி முதல் மூன்று கட்டங்களாக நடைபெறவுள்ளது.
இதற்காக காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை தேர்வு செய்யும் குழுவை காங்கிரஸ் தலைமை அறிவித்துள்ளது.
அந்தக் குழுவின் தலைவராக பிரித்விராஜ் சவான், உறுப்பினர்களாக கமலேஸ்வர் படேல், திபிகா பாண்டே சிங், ஜிதேந்தர் சிங், ரிபூன் பொரா, அனிருத் சிங், பிரித்விராஜ் பிரபாகர் சதே, விகாஸ் உபாத்யேய் உள்ளிட்டோரை நியமித்து காங்கிரஸ் பொதுச்செயலாளர் வேணுகோபால் உத்தரவிட்டுள்ளார்.