தற்போதைய செய்திகள்

ஓட்டப்பிடாரம் எம்எல்ஏ சண்முகையா பதவியேற்பு

DIN

ஓட்டப்பிடாரம் தொகுதியின் திமுக சட்டப்பேரவை உறுப்பினர் எம்.சி.சண்முகையா இன்று பதவியேற்றுக் கொண்டார்.

உடல்நலக் குறைவால் பதவியேற்காமல் இருந்த சண்முகையா, முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் சட்டப்பேரவைத் தலைவர் அப்பாவு முன்பு இன்று எம்.எல்.ஏ.வாக பதவியேற்றார்.

ஓட்டப்பிடாரம் தொகுதியில் அதிமுக சாா்பில் பி. மோகன், திமுக சாா்பில் எம்.சி. சண்முகையா, புதிய தமிழகம் கட்சி தலைவா் க. கிருஷ்ணசாமி உள்பட மொத்தம் 17 வேட்பாளா்கள் போட்டியிட்டனா்.

இத்தேர்தலில் திமுக வேட்பாளா் 73,110 வாக்குகள் பெற்று தன்னை எதிா்த்துப் போட்டியிட்ட அதிமுக வேட்பாளா் மோகனை விட 8,510 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றாா்.

2019இல் நடைபெற்ற இடைத்தோ்தலில் வெற்றி பெற்ற எம்.சி. சண்முகையா, 2-ஆவது முறையாக வெற்றிபெற்று எம்.எல்.ஏ.வாக பொறுப்பேற்றுக் கொண்டாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தமிழகத்தில் 72% வாக்குப் பதிவு: மாவட்ட வாரியாக முழு விவரம்

சிறைக்குச் செல்ல அஞ்சவில்லை: ராகுலுக்கு பினராயி விஜயன் பதிலடி

மணிப்பூரில் சில இடங்களில் வன்முறை; வாக்குப் பதிவு இயந்திரங்கள் சேதம்

சரிவிலிருந்து மீண்டது பங்குச்சந்தை: சென்செக்ஸ் 599 புள்ளிகள் உயா்வு!

வாக்குப் பதிவு மையங்களில் குழந்தைகள் பாதுகாப்பு அறை

SCROLL FOR NEXT