தில்லியில் உள்ள ரயில் நிலையங்களில் தேவையற்ற கூட்டத்தை குறைக்க நடைமேடை டிக்கெட்டின் விலையை ரூ. 30ஆக உயர்த்தி வடக்கு ரயில்வே அறிவித்துள்ளது.
கரோனா பரவல் காரணமாக ரயில் நிலையங்களில் பயணிகளை தவிர நடைமேடை டிக்கெட் பெற்று உடன் வருபவர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டு வந்தது.
இந்நிலையில், தில்லியில் உள்ள ரயில் நிலையங்களில் மீண்டும் நடைமேடை டிக்கெட் சேவை தொடங்கப்படும் என வடக்கு ரயில்வே அறிவித்துள்ளது.
இதுகுறித்து வடக்கு ரயில்வே கூறியது,
தில்லி மண்டலத்தில் உள்ள 8 ரயில் நிலையங்களில் மீண்டும் நடைமேடை டிக்கெட் கொடுக்கும் பணி தொடங்கப்படும். மேலும், தேவையற்ற கூட்டத்தை குறைக்கும் விதமாக நடைமேடை டிக்கெட்டின் விலை ரூ. 30ஆக உயர்த்தப்படுகிறது எனத் தெரிவித்துள்ளது.