தற்போதைய செய்திகள்

தமிழகத்தில் இதுவரை 98 லட்சம் பேருக்கு தடுப்பூசி: மா. சுப்பிரமணியன்

DIN

தமிழகத்தில் இதுவரை 98 லட்சம் பேருக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக மருத்துவத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து செய்தியாளர்கள் சந்திப்பில் பேசியதாவது,

தமிழகத்திற்கு இதுவரை மொத்தம் 1.06 கோடி கரோனா தடுப்பூசிகள் வந்துள்ளன. அதில், 98 லட்சம் பேருக்கு கரோனா தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளது. 

சென்னையில் மட்டும் இதுவரை 21,63,200 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. மேலும், சென்னையில் உள்ள 5,000 மாற்றுத்திறனாளிகளுக்கு வீடுகளுக்கே சென்று தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

கோயம்பேடு சந்தையில் நேற்றுவரை 9,555 பேருக்கும், காசிமேடு மீன்பிடித் துறைமுகத்தில் இதுவரை 2,500 பேருக்கும் கரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மக்களவைத் தேர்தல்: முதல்கட்ட வாக்குப்பதிவு - செய்திகள் உடனுக்குடன்!

தமிழகத்தில் இந்தியா கூட்டணி அனைத்துத் தொகுதிகளிலும் வெற்றி பெறும்: ப. சிதம்பரம்

அரசியலை விட்டு விலகத் தயார்: வாக்களித்தப் பின் அண்ணாமலை பேட்டி

சொந்த கிராமத்தில் குடும்பத்துடன் சென்று வாக்களித்த இபிஎஸ்!

மத்திய தோல் ஆராய்ச்சி மையத்தில் வேலை: 22 இல் நேர்முகத் தேர்வு

SCROLL FOR NEXT