தமிழகத்தில் கரோனா தடுப்பூசி தட்டுப்பாடு காரணமாக நிறுத்தப்பட்ட தடுப்பூசி போடும் பணிகள் இன்று மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது.
கரோனா தடுப்பூசி கையிருப்பு இல்லாத காரணத்தால் கடந்த 3 நாள்களாக தடுப்பூசி செலுத்தும் பணிகள் தமிழகம் முழுவதும் நிறுத்தப்பட்டிருந்தது.
இந்நிலையில் மதுரை, திருவள்ளூர் உள்ளிட்ட மாநிலங்களில் கரோனா தடுப்பூசி போடும் பணி இன்று மீண்டும் தொடங்கியுள்ளது.
மேலும், இந்த மையங்களில் கோவேக்சின் இரண்டாம் தவணை தடுப்பூசி மட்டுமே போடப்பட்டு வருகிறது.