கும்மிடிப்பூண்டி: கும்மிடிப்பூண்டியில் எல்ஐசி முகவர் மற்றும் ஊழியர் சங்கத்தின் சார்பில் எல்ஐசி பங்குகளை தனியாருக்கு விற்பதை கண்டித்து கும்மிடிப்பூண்டி எல்ஐசி அலுவலகம் முன்பு நடைபெற்றது.
எல்ஐசி முகவர் சங்க நிர்வாகிகள் தங்கவேல் மற்றும் சி.ஆறுமுகம் தலைமையில் நடைபெற்ற இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் எல்ஐசி ஊழியர் சங்க நிர்வாகிகள் மணி, வில்சன், எல்ஐசி முகவர் சங்க தலைவர் என்.அண்ணாமலை, செயலாளர் ஏ.எம்.வாசு, பொருளாளர் எஸ்.செல்வகுமார், துணை தலைவர் எஸ்.ரவி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
தொடர்ந்து நிகழ்வில் பொதுதுறையை தனியாருக்கு விற்கும் மத்திய அரசின் போக்கை கண்டித்தும், எல்ஐசி பங்குகளை தனியாருக்கு விற்பதை கண்டித்தும், எல்ஐசி முகவர் சங்கத்தின் பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தியும் கண்டன கோஷங்கள் எழுப்பினர்.