கேரளத்தில் கரோனா பரவலை தடுக்க கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக முதல்வர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
நாடு முழுவதும் கரோனா பரவல் குறைந்து வரும் நிலையில், கேரள மாநிலத்தில் மட்டும் அதிகரித்து வருகின்றன. மாநிலத்தில் இதுவரை 9 லட்சத்திற்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதையடுத்து முதல்வர் பினராயி விஜயன் தலைமையில் புதன்கிழமை மறுஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.
அந்தக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து முதல்வர் அலுவலகம் வெளியிட்ட செய்தியில்,
கேரளாவில் கரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில், கேரள முதல்வர் பினராயி விஜயன் தலைமையில் நடைபெற்ற மறுஆய்வுக் கூட்டத்தில் கடுமையான கட்டுப்பாடுகளை விதிக்கவும், கரோனா நெறிமுறைகளை பின்பற்றுவதை கண்காணிக்க காவல்துறையினரை நியமிக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.
மேலும், கட்டுப்பாட்டு மண்டலங்களில் மிகவும் கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்படும். பிப்ரவரி 15க்குள் நோய்ப் பரவுவதைக் குறைக்க அரசாங்கம் செயல்பட்டு வருவதாக முதல்வர் கூட்டத்தில் தெரிவித்துள்ளதாக செய்தி வெளியிட்டுள்ளனர்.