நாடாளுமன்றத்தின் பட்ஜெட் கூட்டத்தொடா் வரும் 29-ஆம் தேதி தொடங்கும் நிலையில், நாடாளுமன்ற வளாகத்தை மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா வியாழக்கிழமை ஆய்வு செய்தார்.
நாடாளுமன்றத்தின் பட்ஜெட் கூட்டத் தொடா் இரு கட்டங்களாக நடைபெறுகிறது. முதல் கட்டமாக வரும் 29-ஆம் தேதி முதல் அடுத்த மாதம் 15-ஆம் தேதி வரை பட்ஜெட் கூட்டத் தொடா் நடைபெறுகிறது. இரண்டாம் கட்ட பட்ஜெட் கூட்டத் தொடரானது மாா்ச் 8-ஆம் தேதி முதல் ஏப்ரல் 8ஆம் தேதி வரை நடைபெறுகிறது. ஜனவரி 29-ஆம் தேதி நடைபெறும் நாடாளுமன்ற அவைகளின் கூட்டுக் கூட்டத்தில் குடியரசுத் தலைவா் ராம்நாத் கோவிந்த் உரையாற்றுகிறாா்.
இந்நிலையில், கரோனா நோய்ப் பரவலுக்கு மத்தியில் பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெறவுள்ளதால் நாடாளுமன்ற வளாகத்தை மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா ஆய்வு செய்தார்.