கிங்ஸ் லெவன் பஞ்சாபிலிருந்து கிளென் மேக்ஸ்வெல், ஷெல்டன் காட்ரெல் உள்ளிட்ட முக்கிய வீரர்கள் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
ஐபிஎல் போட்டியில் இருக்கும் 8 அணிகள் தங்களிடம் தக்கவைத்துக் கொள்ள விரும்பும் வீரர்களின் பட்டியலை ஜனவரி 21-ஆம் தேதிக்குள் வழங்க வேண்டும் என ஐபிஎல் நிர்வாகக் குழு முடிவு செய்திருந்தது. இந்த நிலையில், ஐபிஎல் அணிகள் விடுவிக்கப்பட்ட வீரர்கள் பட்டியலை வெளியிட்டு வருகின்றனர்.
இந்த வரிசையில் பஞ்சாபிலிருந்து நட்சத்திர வீரர்களான கிளென் மேக்ஸ்வெல், ஷெல்டன் காட்ரெல் விடுவிக்கப்பட்டுள்ளனர். கேப்டன் கே எல் ராகுல், நிகோலஸ் பூரன், முகமது ஷமி உள்ளிட்ட வீரர்கள் தக்கவைக்கப்பட்டுள்ளனர்.
விடுவிக்கப்பட்ட வீரர்கள்:
கிளென் மேக்ஸ்வெல், ஷெல்டன் காட்ரெல், கே கௌதம், முஜீப் உர் ரஹ்மான், ஜிம்மி நீஷம், கருண் நாயர் மற்றும் கார்டஸ் விலிஜோன்.