அமெரிக்க உச்சநீதிமன்றத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
வாஷிங்டனில் உள்ள அமெரிக்க உச்சநீதிமன்றத்திற்கு புதன்கிழமை வெடிகுண்டு மிரட்டல் வந்ததையடுத்து, அனைவரும் வெளியேற்றப்பட்டு சோதனை செய்யப்பட்டனர்.
அமெரிக்காவின் புதிய அதிபராக ஜோ பைடன் சற்று நேரத்தில் பதவியேற்கவுள்ள நிலையில் உச்சநீதிமன்றத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதால் நாடு முழுவதும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.