கரோனாவால் பாதிக்கப்பட்ட தமிழக உணவுத்துறை அமைச்சர் காமராஜ் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த 6ஆம் தேதி கரோனா நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் சிகிச்சையில் இருந்து வந்தார்.
இந்நிலையில், இணை நோய்கள் காரணமாக தற்போது சென்னை ராஜிவ் காந்தி மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றனர்.
மேலும், சென்னை ராஜிவ் காந்தி மருத்துவமனையில் இருந்து எம்.ஜி.எம். மருத்துவமனைக்கு மாற்றப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.