ஆப்கானிஸ்தானின் உருஸ்கான் மாகாணத்தில் நடந்த குண்டு வெடிப்பில் இரண்டு பாதுகாப்புப் படை வீரர்கள் உள்பட 11 பேர் செவ்வாய்க்கிழமை உயிரிழந்துள்ளனர்.
உருஸ்கான் மாகாணத்தின் தாரின்கோட் நகரில் செவ்வாய்க்கிழமை மதியம் குண்டு வெடிப்பு ஏற்பட்டது. இதில் இரண்டு பாதுகாப்புப் படை வீரர்கள், 9 பொதுமக்கள் பலியாகியுள்ளனர். மேலும், சிலர் காயமடைந்துள்ளனர்.
இந்த குண்டு வெடிப்பானது, அப்பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிளிலிருந்து வெடித்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
தற்போது வரை இந்த சம்பவத்திற்கு எந்த அமைப்பும் பொறுப்பேற்கவில்லை.