தமிழகத்தில் இன்று(திங்கள்கிழமை) ஒரே நாளில் 10,256 பேருக்கு கரோனா தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளதாக மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
இதுகுறித்து மாநில சுகாதாரத்துறை வெளியிட்ட செய்தியில்,
தமிழகத்தில் மாலை 7 மணி நிலவரப்படி, முன்களப் பணியாளர்கள் உள்பட 10,256 பேருக்கு இன்று ஒரே நாளில் கரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது. இதில் கோவிஷீல்ட் தடுப்பூசி 10,051 பேருக்கு, கோவேக்சின் தடுப்பூசி 205 பேருக்கு போடப்பட்டுள்ளது.
இதையடுத்து, கடந்த மூன்று நாள்களில் மொத்தம் 16,742 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. இதில் கோவிஷீல்ட் தடுப்பூசி 15,975 பேருக்கு, கோவேக்சின் தடுப்பூசி 487 பேருக்கு போடப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.