மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் நாளை(செவ்வாய்க்கிழமை) இலங்கைக்கு சுற்றுப்பயணம் செல்வதாக மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் வெளியிட்ட செய்தியில்,
இலங்கை வெளியுறவுத்துறை அமைச்சர் தினேஷ் குணவர்தனவின் அழைப்பின் பேரில், ஜனவரி 5 முதல் 7ஆம் தேதி வரை மூன்று நாள்களுக்கு, மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் அதிகாரப்பூர்வ சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ளார்.
இந்த பயணத்தின் போது, இரு நாட்டு உறவுக் குறித்து விவாதிக்க இருப்பதாக தெரிவித்துள்ளனர்.