மேற்குவங்கத்தில் 200 தொகுதிகளில் பாஜக வெற்றி பெரும் என்று மாநில தலைவர் திலீப் கோஷ் வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளார்.
மேற்குவங்கம் உள்ளிட்ட 5 மாநிலங்களுக்கான சட்டப்பேரவைத் தேர்தல் தேதிகள் இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து, தேர்தல் நடத்தை விதிமுறைகளும் அமலுக்கு வந்துள்ளது.
இதுகுறித்து மேற்குவங்க பாஜக தலைவர் கூறியதாவது,
திரிணமூல் காங்கிரஸின் பல உறுப்பினர்கள் கட்சியை விட்டு வெளியேறி பாஜகவில் சேர்ந்துள்ளனர். கட்சியினரின் மன உறுதியும் பாதிக்கப்பட்டுள்ளது.
மேலும், வரவிருக்கும் மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் 200 இடங்களில் போட்டியிட்டு பாஜக வெல்லும் எனத் தெரிவித்துள்ளார்.