தற்போதைய செய்திகள்

மேற்குவங்கத்தில் இந்தமுறை தாமரை மலரும்: ஸ்மிருதி இரானி

ANI

வரும் சட்டப்பேரவை தேர்தலில் மேற்குவங்கத்தில் தாமரை மலர்வதற்கான அறிகுறியை மக்களிடம் காண்பதாக மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளார். 

மேற்குவங்க மாநிலத்தின் சட்டப்பேரவைத் தேர்தல் இன்னும் சில மாதங்களில் நடக்கவுள்ள நிலையில், அனைத்து கட்சிகளை சேர்ந்த தலைவர்களும் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் இன்று மேற்குவங்கத்தின் பஞ்ச்போட்டாவில் பாஜக சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த மோட்டார் வாகன பேரணியில் மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி பங்கேற்றார்.

அதில் அவர் பேசியதாவது,

மம்தா பானர்ஜியின் ஆட்சியை வன்முறை வரையறுத்துள்ளது. மேற்குவங்கம்  முழுவதும் உள்ள ஜனநாயகக் குரல்கள் இந்த முறை சட்டப்பேரவைத் தேர்தலில் திரிணமூல் தோல்வியடைவதை உறுதி செய்வோம் என்று முடிவு செய்துள்ளன.

பேரணி மற்றும் எங்கள் மூத்த தலைவர்கள் அறிவிக்கும் திட்டங்களுக்கு மேற்குவங்க மக்கள் பெரும் ஆதரவு தருகிறார்கள். அவர்களுக்கு நாங்கள் நன்றி உள்ளவர்களாக இருப்போம். இந்த முறை மேற்குவங்கத்தில் தாமரை மலரும் என்பதற்கான அறிகுறி இதுவாகும் எனத் தெரிவித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் வாக்களித்தார்!

வாக்களிக்க வராத சென்னை மக்கள்: வாக்குப்பதிவு மந்தம்

மக்களவைத் தேர்தல்: முதல்கட்ட வாக்குப்பதிவு - செய்திகள் உடனுக்குடன்!

மக்களவைத் தேர்தல் வாக்குப்பதிவு: ஓ... பன்னீர்செல்வங்கள்!

ஆந்திரம்: வேட்பாளரின் பிரசார வாகனம் மோதியதில் சிறுவன் பலி

SCROLL FOR NEXT