கோவேக்ஸின் கரோனா தடுப்பூசி வாங்க பிரேசில் நாடு ஒப்பந்தம் செய்துள்ளதாக பாரத் பயோடெக் நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்திய நிறுவனமான பாரத் பயோடெக் கோவேக்ஸின் தடுப்பூசியை தயாரித்து வருகின்றது. இந்நிலையில், 2 கோடி தடுப்பூசி வாங்குவதற்கு பாரத் பயோடெக் நிறுவனத்துடன் பிரேசில் நாடு ஒப்பந்தம் செய்துள்ளது.
இந்திய மக்களுக்கு கோவேக்ஸின், கோவிஷீல்ட் ஆகிய தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.