சென்னையிலிருந்து தனி விமானம் மூலம் கோவை விமானம் நிலையம் வந்தடைந்தார் பிரதமர் மோடி.
தில்லியிலிருந்து வியாழக்கிழமை காலை புறப்பட்ட பிரதமர் நரேந்திர மோடி தனி விமானம் மூலம் சென்னைக்கு காலை 10.15 மணியளவில் வந்தடைந்தார். சென்னை விமான நிலையத்திலிருந்து ஹெலிகாப்டர் மூலம் புதுச்சேரிக்கு சென்ற பிரதமர், அங்கு பல்வேறு திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினர்.
பின், சென்னை திரும்பிய பிரதமர் அங்கிருந்து தனி விமானம் மூலம் மதியம் 3.30 மணியளவில் கோவை விமான நிலையம் வந்தடைந்தார்.
கோவையில் பல்வேறு திட்டங்களை தொடங்கி வைக்கும் மோடி, மாலை பொதுக்கூட்டத்தில் பங்கேற்கிறார்.