தற்போதைய செய்திகள்

தமிழகத்தில் மேலும் 464 பேருக்கு கரோனா

8th Feb 2021 06:25 PM

ADVERTISEMENT

தமிழகத்தில் புதிதாக 464 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது இன்று (திங்கள்கிழமை) உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதைத் தொடர்ந்து, தமிழகத்தில் மொத்தம் பாதித்தோர் எண்ணிக்கை 8,42,261 ஆக உயர்ந்துள்ளது.

அதிகபட்சமாக சென்னையில் 143 பேருக்கு கரோனா பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

கடந்த 24 மணிநேரத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வந்த 4 பேர் பலியாகியுள்ளனர். இதைத் தொடர்ந்து, மொத்த பலி எண்ணிக்கை 12,387 ஆக உயர்ந்துள்ளது.

ADVERTISEMENT

மேலும் 495 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை மொத்தம் 8,25,520 பேர் நோய்த் தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனர். தற்போது மருத்துவமனையில் 4,354 பேர் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். 

ADVERTISEMENT
ADVERTISEMENT