மூன்று நாள்கள் பயணமாக பெங்களூரு சென்றுள்ள குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தை முதல்வர் எடியூரப்பா வரவேற்றார்.
கர்நாடகம் மற்றும் ஆந்திரத்திற்கு பிப்ரவரி 4 முதல் 7 வரை குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் சென்றுள்ளார்.
முதல் நாள் பயணமான இன்று பெங்களூரு சென்ற குடியரசுத் தலைவரை கர்நாடக முதல்வர் எடியூரப்பா விமான நிலையத்தில் வரவேற்றார்.
இந்த பயணத்தின் போது பெங்களூரில் நடைபெற்று வரும் ஏரோ இந்தியா-2021 நிகழ்வின் நிறைவு விழாவில் பங்கேற்கவுள்ளது குறிப்பிடத்தக்கது.