மேற்கு வங்கத்தை இரண்டு குண்டர்களிடம் ஒப்படைக்க மாட்டோம் என திரிணமூல் தலைவரும், மாநில முதல்வருமான மம்தா பானர்ஜி விமர்சித்துள்ளார்.
மேற்கு வங்க சட்டப்பேரவையின் 6ஆம் கட்டத் தேர்தல் இன்று நடைபெற்று வரும் நிலையில், அடுத்த கட்ட தேர்தலுக்கான பிரசாரத்தில் மம்தா ஈடுபட்டு வருகின்றார்.
இந்நிலையில் இன்று தக்ஷின் தினாஜ்பூரில் நடந்த பேரணியில் மம்தா பேசியது,
நான் ஒரு வீரர் அல்ல, ஆனால் எனக்கு எப்படி விளையாடுவது என்று தெரியும். முன்னதாக மக்களவையில் நான் சிறந்த உறுப்பினராக இருந்தேன். எங்கள் வங்கத்தை தில்லியின் இரண்டு குண்டர்களிடம் ஒப்படைக்க முடியாது என்றார்.