தில்லியில் தண்ணீர் விநியோகம் பாதிக்கப்பட உள்ளதாக மாநில குடிரீந் வாரிய துணைத் தலைவர் ராகவ் சாதா செவ்வாய்க்கிழமை தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து செய்தியாளர்கள் சந்திப்பில் பேசியதாவது,
தெற்கு, வடக்கு, மத்திய மற்றும் மேற்கு தில்லி ஆகிய பகுதிகளில் தண்ணீர் விநியோகம் பாதிக்கப்படவுள்ளது.
உச்சநீதிமன்ற உத்தரவை மீறி தில்லிக்கு போதுமான சுத்தகரிக்கப்பட்ட தண்ணீரை ஹரியாணா கொடுக்கவில்லை. ஆகையால் தில்லியில் தண்ணீர் விநியோகத்தில் சிக்கல் ஏற்பட்டுள்ளது எனத் தெரிவித்துள்ளார்.