இந்திய தலைமைத் தேர்தல் ஆணையராக சுஷில் சந்திரா திங்கள்கிழமை நியமிக்கப்பட்டுள்ளார்.
தலைமைத் தேர்தல் ஆணையராக இருந்த சிநீல் அரோரா ஓய்வு பெற்றதையடுத்து புதிய தலைமைத் தேர்தல் ஆணையராக சுஷில் சந்திராவை குடியரசுத் தலைவர் நியமனம் செய்துள்ளார்.
இந்நிலையில், நாளை(ஏப்.13) தலைமைத் தேர்தல் ஆணையராக பதவியேற்கவுள்ளார். இவரது பதவிக் காலம் 2022ஆம் ஆண்டு மே 14 வரை உள்ளது.
கடந்த 2019ஆம் ஆண்டு பிப்ரவரி 14ஆம் தேதி இந்திய தேர்தல் ஆணையராக சுஷில் சந்திரா பதவியேற்றுக் கொண்டது குறிப்பிடத்தக்கது.