தற்போதைய செய்திகள்

கரோனா விதிமீறல்: தமிழகத்தில் 4 நாள்களில் ரூ. 2.77 கோடி அபராதம் வசூல்

DIN

தமிழகம் முழுவதும் கடந்த 4 நாள்களில் கரோனா விதிமுறைகளை மீறியவர்களிடம் ரூ. 2.77 கோடி அபராதமாக வசூலிக்கப்பட்டதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

தமிழகம் முழுவதும் கரோனா இரண்டாம் அலை தீவிரமாக பரவி வரும் நிலையில், முகக்கவசம் அணிவது, சமூக இடைவெளி பின்பற்றுவது போன்ற கரோனா விதிமுறைகளை பொதுமக்கள் கட்டாயம் கடைபிடிக்க வேண்டும் என தமிழக அரசு வலியுறுத்தி வருகின்றது.

இந்நிலையில், கரோனா விதிமுறைகளை மீறியவர்களிடம் காவல்துறை மற்றும் மாநகராட்சி ஊழியர்கள் அபராதம் வசூலித்து வருகின்றனர்.

இதுகுறித்து காவல்துறை இன்று வெளியிட்டுள்ள செய்தியில்,

கடந்த ஏப்ரல் 8ஆம் தேதி முதல் 11ஆம் தேதி வரை 4 நாள்களில் தமிழகம் முழுவதும் முகக்கவசம் அணியாதவர்கள், சமூக இடைவெளி பின்பற்றாதது தொடர்பாக 1.36 லட்சம் வழக்குகள் பதிவு செய்யப்பட்டு ரூ. 2.77 கோடி அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது.

சென்னை நகரை தவிர்த்து பிற இடங்களில் முகக்கவசம் அணியாதவர்களிடம் மட்டும் ரூ. 2.52 கோடி அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

காலாவதி தேதி குறிப்பிடாத குடிநீா்: ரூ.5 ஆயிரம் அபராதம் விதிப்பு

வாக்கு ஒப்புகைச் சீட்டு வழக்கில் இன்று தீா்ப்பு

ஆறுமுகனேரி விநாயகா் கோயிலில் கும்பாபிஷேகம்

கோடை விடுமுறை: ஏற்காட்டுக்கு கூடுதல் பேருந்துகள் இயக்கம்

களக்காட்டில் முத்திரைத் தாள் தட்டுப்பாடு: மக்கள் அவதி

SCROLL FOR NEXT