12ஆம் வகுப்பு பொதுத் தேர்வின் அட்டவணையில் மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
மே 3ஆம் தேதி நடைபெறவிருந்த முதலாவது(மொழிப்பாடம்) தேர்வு மே 31ஆம் தேதிக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து தேர்வுகள் இயக்ககம் வெளியிட்ட செய்தியில்,
2020-2021ஆம் கல்வியாண்டில், 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வு மே 3 முதல் 21 வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. தற்சமயம் சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை மே 2-ல் நடைபெறுவதால், மே 3 நடைபெறுவதாக இருந்த மொழிப்பாடத்தேர்வு மட்டும் மே 31ஆம் தேதி நடைபெறும்.
இதர தேர்வுகள் ஏற்கனவே அறிவிக்கப்பட்ட தேதிகளிலேயே நடைபெறும் என அறிவித்துள்ளனர்.