ஐ.பி.எல். போட்டியில் பந்தயம் கட்டி சூதாடியதாக கொல்கத்தாவில் 9 பேரைக் காவல்துறை கைது செய்துள்ளதாக தெரிவித்தனர்.
துபையில் நடந்து வரும் ஐ.பி.எல். போட்டியை வைத்து கொல்கத்தாவின் பல்வேறு பகுதிகளில் சூதாட்டத்தில் ஈடுபட்ட 9 பேரைக் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
மேலும், குற்றம் கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து பல ஆவணங்கள், 14 மடிக்கணினிகள், 17 செல்லிடப்பேசிகள், 3 தொலைக்காட்சிகள் மற்றும் ஒரு வாகனம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
மேற்கு வங்க சூதாட்டச் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது என காவல்துறை தரப்பில் தெரிவித்துள்ளனர்.