தற்போதைய செய்திகள்

ஐ.பி.எல். சூதாட்டத்தில் ஈடுபட்ட 9 பேர் கைது

ANI

ஐ.பி.எல். போட்டியில் பந்தயம் கட்டி சூதாடியதாக கொல்கத்தாவில் 9 பேரைக் காவல்துறை கைது செய்துள்ளதாக தெரிவித்தனர்.

துபையில் நடந்து வரும் ஐ.பி.எல். போட்டியை வைத்து கொல்கத்தாவின் பல்வேறு பகுதிகளில் சூதாட்டத்தில் ஈடுபட்ட 9 பேரைக் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

மேலும், குற்றம் கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து பல ஆவணங்கள், 14 மடிக்கணினிகள், 17 செல்லிடப்பேசிகள், 3 தொலைக்காட்சிகள் மற்றும் ஒரு வாகனம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

மேற்கு வங்க சூதாட்டச் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது என காவல்துறை தரப்பில் தெரிவித்துள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

காரைக்காலில் ஏப்.27-ல் ஜிப்மா் மருத்துவ முகாம்

குஜராத்தை ‘த்ரில்’ வெற்றி கண்டது டெல்லி

வாசிக்க மறந்த வரலாறு!

பாதுகாப்பாக சேமிப்போம்

உண்மையே மக்களாட்சியின் அடிப்படை!

SCROLL FOR NEXT