தற்போதைய செய்திகள்

ராகுல் அதிரடி சதம்: பெங்களூருக்கு 207 ரன்கள் இலக்கு

DIN

கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்கு எதிரான ஆட்டத்தில் டாஸ் வென்ற ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தது.

இதையடுத்து களமிறங்கிய பஞ்சாப் அணியில் கே.எல்.ராகுல் மற்றும் மயங்க் அகர்வால் இணைந்து வலுவான துவக்கம் கொடுத்தனர்.

பின் மயங்க் அகர்வால் 26 ரன்களில் ஆட்டமிழக்க, ராகுலுடன் இணைந்த நிகோலஸ் பூரன் 17 ரன்களில் அவுட்டானார்.

இதைத்தொடர்ந்து கிளென் மேக்ஸ்வெல் 5 ரன்களில் ஆட்டமிழக்க, இறுதிவரை ஆடிய ராகுல் 69 பந்துகளில் 132 ரன்களும் கருண் 15 ரன்களில் ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர்.

பெங்களூரு அணி சார்பில் சிவம் துபே அதிகபட்சமாக 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

இறுதியில் 20 ஓவர்கள் முடிவில் பஞ்சாப் அணி 3 விக்கெட்டுகளை இழந்து 206 ரன்கள் எடுத்ததன் முலம் பெங்களூரு அணியின் வெற்றிக்கு 207 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வாக்கு எண்ணும் பாதுகாப்பு மையத்தில் ஆய்வு

கல்லிடைக்குறிச்சியில் விஷம் குடித்தவா் உயிரிழப்பு

வறுமையிலிருந்து 40 கோடி இந்தியா்கள் மீட்பு: அமெரிக்காவின் ஜேபி மாா்கன் சேஸ் நிறுவன சிஇஓ

மத வெறுப்பு: பிரதமருக்கு கண்டனம்

மாநகராட்சி துப்புரவு பணியாளா் மீது தாக்குதல்

SCROLL FOR NEXT