கம்பம்: தேனி மாவட்டம் கம்பத்தில் மத்திய அரசு கொண்டு வந்த வேளாண் சட்டத்தை எதிர்த்து சிபிஎம் கட்சியினர் செவ்வாய்க்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கம்பத்தில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு கிளைக்குழு உறுப்பினர் எஸ். சின்னராஜ் தலைமை வகித்தார்.
இதில் கிளைச் செயலாளர் ஜி.எம்.நாகராஜன், மாவட்டக்குழு உறுப்பினர்கள் பி.ஜெயராஜ், எஸ்.பன்னீர்வேல், கிளைக்குழு உறுப்பினர் பி.அய்யப்பன், ஐ.பாலகுருநாதன், பெ.அய்யப்பன், ஒய்வு பெற்ற போக்குவரத்து தொழிலாளர் சங்கத்தின் தலைவர்கள் பரமராஜ், ஆத்ம கணபதி மற்றும் கிளை செயலாளர்கள் ஷேக் அப்துல்லா, சி. குமார், எஸ்.உசேன் உட்பட பலர் கலந்து கொண்டனர்