தற்போதைய செய்திகள்

ஸ்ரீவிலி. சாலைப் போக்குவரத்து தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்

DIN

ஸ்ரீவில்லிபுத்தூர் : பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வட்டார போக்குவரத்து அலுவலகம் முன்பு சாலை போக்குவரத்து தொழிலாளர்கள் சங்கத்தினர் செவ்வாய்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆர்ப்பாட்டத்திற்கு செட்டியார்பட்டி சிஐடியு டாக்சிவேன்  சங்கத்தின் தலைவர் சேவுகபாண்டியன் தலைமை வகித்தார். சிஐடியு மாநிலக்குழு உறுப்பினர் திருமலை சிஐடியு மாவட்ட துணைத்தலைவர் கணேசன் ஆகியோர் கோரிக்கைகளை விளக்கிப் பேசினர்.

மோட்டார் தொழிலையும் தொழிலில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க கோரி சிஐடியூ அகில இந்திய சாலைப் போக்குவரத்து சம்மேளனம் மற்றும் அனைத்து மோட்டார் வாகன உரிமையாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் கோஷமிட்டனர்

ஆர்ப்பாட்டத்தில் ராஜபாளையம் டாக்சி வேன் சங்கத்தின் செயலாளர் கண்ணன், சத்திரப்பட்டி சங்க தலைவர் அழகர்சாமி சிஐடியூ நிர்வாகிகள் சந்தானம்,வீரசதானந்தம் ஸ்ரீவில்லிபுத்தூர் சங்க நிர்வாகி காமாட்சி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர் ஆர்ப்பாட்டத்தில் ராஜபாளையம் ஸ்ரீவில்லிபுத்தூர் சங்கங்களை சேர்ந்த உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கிரிக்கெட் கதையை இயக்கும் ஜேசன் சஞ்சய்?

கர்நாடகத்துக்கு போறீங்களா.. ஹாயர் பெனகல்லை தவறவிடாதீர்!

’ஸ்டார்’ கரீனா கபூர்!

5 பன்னீர்செல்வங்களின் வேட்புமனுக்களும் ஏற்பு: போட்டி உறுதி!

தமிழக காவல் துறையில் இளநிலை செய்தியாளர் வேலை வேண்டுமா?

SCROLL FOR NEXT