ராஜஸ்தான் ராயல்ஸுக்கு எதிரான ஆட்டத்தில் டாஸ் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்துள்ளது.
ஐபிஎல்-இன் இன்றைய ஆட்டத்தில் ராஜஸ்தான், சென்னை அணிகள் மோதுகின்றன. சார்ஜாவில் நடைபெறும் இந்த ஆட்டத்தில், டாஸ் வென்ற சென்னை கேப்டன் மகேந்திர சிங் தோனி முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்துள்ளார்.
சென்னை அணியில் காயம் காரணமாக ராயுடுவுக்குப் பதில் ருதுராஜ் சேர்க்கப்பட்டுள்ளார். ருதுராஜ் அண்மையில் கரோனாவிலிருந்து குணமடைந்தது குறிப்பிடத்தக்கது.
ராஜஸ்தான் அணியில் வெளிநாட்டு வீரர்களாக ஸ்டீவ் ஸ்மித், ஜோப்ரா ஆர்ச்சர், டேவிட் மில்லர், டாம் கரண் ஆகியோர் களமிறங்குகின்றனர்.