தற்போதைய செய்திகள்

ஆப்கனில் 22 தலிபான்கள் சுட்டுக் கொலை

UNI

ஆப்கானிஸ்தானின் கிழக்கு கோஸ்ட் மாகாணத்தில் தலிபான்கள் மீது பாதுகாப்புப் படைகள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் வியாழக்கிழமை 22 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

இதுகுறித்து ஆப்கானிஸ்தான் படை வெளியிட்ட அறிக்கையில்,

கலந்தர் மாவட்டத்தில் உள்ள காவல்துறையின் சோதனைச் சாவடிகளை வியாழக்கிழமை இரவு தலிபான்கள் தாக்கினார்கள். இதையடுத்து ஆப்கன் படைகள் நடத்திய பதில் தாக்குதலில் 10 தலிபான்கள் கொல்லப்பட்டனர்.

இதேபோல், சபரி மாவட்டத்தில் ஒரு தலிபான் மறைவிடத்தை குறிவைத்து போர் விமானம் தாக்கியதில் 12 தலிபான்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர். 

மேலும், இந்த அறிக்கையில் ஆப்கான் படைகளில் ஏற்பட்ட இழப்புகள் குறித்து எந்த செய்தியும் தெரிவிக்காமல், தலிபான்கள் ஆக்கிரமிப்பு இடங்களை கைப்பற்றும் வரை ஆப்கான் படையின் ஒடுக்குமுறை தொடரும் என தெரிவிக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தஞ்சை பெரியகோயிலில் சித்திரைத் தேரோட்டம் கோலாகலம்!

ரைட்ஸ் நிறுவனத்தில் வேலை: பொறியியல் பட்டதாரிகளுக்கு வாய்ப்பு

ஒற்றை கோட்டை முனீஸ்வரா் கோயில் கும்பாபிஷேகம்

இன்று சாதகம் யாருக்கு: தினப்பலன்கள்

இன்று நல்ல நாள்!

SCROLL FOR NEXT