அந்தமான் நிகோபாரில் செவ்வாய்க்கிழமை காலை 4 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்தது.
இதுகுறித்து தேசிய நில அதிர்வு மையம் வெளியிட்ட அறிக்கையில்,
அந்தமான் நிகோபாரில் செவ்வாய்க்கிழமை காலை 3 மணியளவில் 4 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது.
இந்த நிலநடுக்கமானது டிக்லிபூரிலிருந்து தென்கிழக்கில் 20 கி.மீ. தொலையில் மையம் கொண்டிருந்தது என தெரிவித்தனர்.
மேலும் சேதங்கள் குறித்த விவரங்கள் இதுவரை வெளியிடவில்லை.