தற்போதைய செய்திகள்

1000 சிக்ஸர்களைக் கடந்த கெயில்: ராஜஸ்தானுக்கு 186 ரன்கள் இலக்கு

DIN

ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிராக முதலில் பேட் செய்த கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி 20 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து 185 ரன்கள் குவித்தது.

13-வது ஐபிஎல் சீசனின் 50-வது ஆட்டத்தில் கிங்ஸ் லெவன் பஞ்சாப், ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் விளையாடுகின்றன. இதில் டாஸ் வென்ற ராஜஸ்தான் கேப்டன் ஸ்மித் முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தார்.

பஞ்சாப் அணியின் தொடக்க வீரர்களாக ராகுன், மண்டிப் களமிறங்கினர்.

ஆர்சர் வீசிய முதல் ஓவரின் கடைசி பந்தில் மண்டிப் ஆட்டமிழந்தார்.

பின் ராகுலுடன் இணைந்து பார்ட்னர்ஷிப் அமைத்து ராஜஸ்தான் பவுலர்களை துவம்சம் செய்தனர்.

ராகுல் 46 ரன்கள் எடுத்திருந்த போது ஸ்டோக்ஸின் 15வது ஓவரில் வெளியேறினார்.

பின் களமிறங்கிய பூரண் 22 ரன்களில் ஆட்டமிழக்க மறுமுனையில் அதிரடியாக ஆடிக்கொண்டிருந்த கெயில் ஆர்சரின் கடைசி ஓவரில், 63 பந்துகளில் 99 ரன்கள் (8 சிக்ஸ்கள், 6 ஃபோர்கள்) எடுத்திருந்தபோது போல்டானார். 

இன்றைய ஆட்டத்தில் 7வது சிக்ஸரை அடித்தபோது 1,000 சிக்ஸர்களை கடந்த சாதனை படைத்தார்.

பஞ்சாப் அணி 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்து 185 ரன்கள் குவித்தனர்.

மேக்ஸ்வெல் (6), தீபக் ஹோடா (1) இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஆம் ஆத்மியின் தேர்தல் வியூகத்தை பாஜக அறிய விரும்புகிறது: அதிஷி குற்றச்சாட்டு

"பாஜக தவறு செய்தால் நாங்கள் கேட்போம்”: எடப்பாடி பழனிசாமி

நிச்சயதார்த்தம் உண்மைதான்: புகைப்படங்களை வெளியிட்ட சித்தார்த் - அதிதி ராவ்!

”இந்த அரசியல் சதிக்கு மக்கள் பதிலளிப்பார்கள்”: அரவிந்த் கேஜரிவால் | செய்திகள்: சில வரிகளில் | 28.03.2024

தூத்துக்குடியில் பலத்த மழை!

SCROLL FOR NEXT