ஆந்திரத்தில் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் நவம்பர் 2 முதல் திறக்கப்படும் என முதலமைச்சர் அலுவலகம் வியாழக்கிழமை தெரிவித்துள்ளது.
இதுகுறித்து முதலமைச்சர் அலுவலகம் வெளியிட்ட செய்தியில்,
கல்லூரிகள் மற்றும் பள்ளிகள் நவம்பர் 2 முதல் திறக்கப்படும். பள்ளிகளில் 9, 10, 11 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு நவம்பர் 2 ஆம் தேதியும், 6, 7 மற்றும் 8 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு நவம்பர் 23 ஆம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்படும்.
பள்ளிகள் ஒருநாள் விட்டு ஒருநாள் மற்றும் பள்ளி வேலையானது அரை நாள் மட்டுமே செயல்படும் என தெரிவித்துள்ளனர்.