அவிநாசி: அவிநாசி அருகே பெரியாயிபாளையம் இரு குழந்தைகளுக்கு சாணிப் பவுடர் கொடுத்து தாய் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டதில், ஒன்றரை வயது பெண் குழந்தை வியாழக்கிழமை இரவு உயிரிழந்தது.
அவிநாசி அருகே பெரியாயிபாளையம் பகுதியைச் சேர்ந்த அம்பேத்கார் காலனியைச் சேர்ந்தவர் சதீஷ். இவரது மனைவி சத்யா. இவர்களுக்கு இரு பெண் குழந்தைகள் உள்ளது.
இந்நிலையில் தனது இரு பெண் குழந்தைக்கும் சாணிப்பவுடர் கொடுத்து விட்டு, சத்யாவும் அருந்தி தற்கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளார். இதில் அனனியா என்ற ஒன்றரை வயது பெண் குழந்தை உயிரிழந்தது.
மேலும் மூத்த பெண் குழந்தையும், தாய் சத்யாவும் தீவிர சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இது குறித்து அவிநாசி காவல்துறை விசாரிக்கின்றனர். இரு பெண் குழந்தைகளுக்கு விஷம் கொடுத்து தாய் தற்கொலை முயற்சியில் ஈடுபட்ட ஒரு குழந்தை உயிரிழந்த சம்பவம் அவிநாசி பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.