கொல்கத்தா நைட் ரைடர்ஸுக்கு எதிரான ஆட்டத்தில் டாஸ் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்துள்ளது.
13-வது ஐபிஎல் சீசனின் 49-வது ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ், சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் விளையாடுகின்றன. இதில் டாஸ் வென்ற சென்னை கேப்டன் தோனி முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தார்.
சென்னை அணியில் டூபிளஸீஸ், மோனு, தாஹீருக்கு பதிலாக வாட்சன், லுங்கி நிகிடி மற்றும் கரண் சர்மா சேர்க்கப்பட்டுள்ளனர்.
கொல்கத்தா அணியில் ரின்கு சிங் சேர்க்கப்பட்டுள்ளார்.