காலாட்படை தினத்தை முன்னிட்டு பிரதமர் நரேந்திர மோடி செவ்வாய்க்கிழமை வாழ்த்து தெரிவித்துள்ளார்.
பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்து வெளியிட்ட சுட்டுரையில்,
“காலாட்படை சிறப்பு தினத்தில் காலாட்படையின் அனைத்து அணிகளுக்கும் வாழ்த்துக்கள். நமது தேசத்தைப் பாதுகாப்பதில் காலாட்படை வகித்த பங்கைப் பற்றி இந்தியா பெருமிதம் கொள்கிறது. அவர்களின் துணிச்சல் தொடர்ந்து லட்சக் கணக்கானவர்களை ஊக்குவிக்கிறது” என்று மோடி தெரிவித்துள்ளார்.
காலாட்படை தினமானது ஆண்டுதோறும் அக்டோபர் 27 ஆம் தேதி கொண்டாடப்படுவது குறிப்பிடத்தக்கது.