தற்போதைய செய்திகள்

ஹைதராபாத் விமான நிலையத்தில் முதன்முறையாக ‘இ-போர்டிங்’ சேவை

PTI

இந்தியாவில் முதன்முறையாக ஹைதராபாதில் உள்ள ராஜீவ் காந்தி விமான நிலையத்தில் சர்வதேச விமான பயணிகளுக்கு இ-போர்டிங் வசதியை அறிமுகம் செய்துள்ளது.

டிஜிட்டல் இந்தியா திட்டத்தின் ஒருபகுதியாக ஹைதராபாதில் இருந்து வெளியேறும் சர்வதேச விமான பயணிகள், காகிதம் அல்லாமல் அனைத்து கோப்புகளையும் மிண்ணனு மூலம் காண்பித்து பயணம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இதன்மூலம் இந்தியாவில் முதன்முறையாக இ-போர்டிங் அறிமுகப்படுத்திய விமான நிலையமாக உள்ளது.

தற்போது இண்டிகோ ஏர்லைன்ஸின் சர்வதேச விமானங்களில் இந்த சேவை அனுமதிக்கப்படுகிறது.

இந்த சேவையின் முதல் விமானமாக, இண்டிகோ ஏர்லைன்ஸ் அக்டோபர் 2 ஆம் தேதி 6E 1405 விமானத்தில் ஹைதராபாத்தில் இருந்து தங்கள் பயணிகளை ஏற்றிச் செல்லும் போது அறிமுகப்படுத்தியது.

ஹைதராபாத்தில் இருந்து இயங்கும் அனைத்து சர்வதேச விமானங்களிலும், இந்த சேவை விரைவில் அறிமுகப்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

எலான் மஸ்க் இந்திய வருகை ஒத்திவைப்பு?

செந்தாழம்பூவில்.. சாக்‍ஷி மாலிக்

நாமக்கல்: 78.16% வாக்குப்பதிவு!

மின் கம்பங்களால் பெரியகோயில் தேரோட்டத்தில் தாமதம்

பெங்களூருவில் இரட்டைக் கொலை: மகளை கொலை செய்த காதலனை கொன்ற தாய்

SCROLL FOR NEXT