தமிழகத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) புதிதாக 3,057 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
தமிழக கரோனா பாதிப்பு நிலவரம் பற்றிய தரவுகளை மாநில சுகாதாரத் துறை வெளியிட்டுள்ளது. மாநிலத்தில் புதிதாக 3,057 பேருக்கு கரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. சென்னையில் மட்டும் 844 பேர் புதிதாக நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதைத் தொடர்ந்து, தமிழகத்தில் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 7,03,250 ஆக உயர்ந்துள்ளது.
இன்று வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பில் மேலும் 33 பேர் பலியானதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து, மொத்த பலி எண்ணிக்கை 10,858 ஆக உயர்ந்துள்ளது.
மேலும் ஒரேநாளில் 4,262 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை மொத்தம் 6,59,432 பேர் குணமடைந்துள்ளனர். 32,960 பேர் இன்னும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.