மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த மதுரை நாடாளுமன்ற உறுப்பினரான சு.வெங்கடேசனுக்கு வெள்ளிக்கிழமை கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
மதுரை நாடாளுமன்றத் தொகுதியின் மக்களவை உறுப்பினராக உள்ளவர் எழுத்தாளர் சு.வெங்கடேசன். இந்நிலையில் அவருக்கு வெள்ளிக்கிழமை கரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக தனது சமூகவலைத்தளப்பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர்,“ இன்று எனக்கு கோவிட் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தோப்பூரில் உள்ள அரசு நுரையீரல் நெஞ்சக மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளேன். நலமுடன் உள்ளேன்.” எனத் தெரிவித்துள்ளார்.
மதுரையில் வியாழக்கிழமை நிலவரப்படி 18 ஆயிரத்து 256 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.