மத்திய உள்துறை அமைச்சகத்தின் துணை ராணுவப் படைகளின் ஐ.பி.எஸ். அதிகாரிகளுக்கு பதவி உயர்வு அளித்து புதன்கிழமை மத்திய அமைச்சகம் உத்தரவிட்டுள்ளனர்.
அதில், இந்தோ-திபெத் காவல் படையின் ஐ.ஜி.யாக இருந்த தல்ஜித் சவுத்ரி கூடுதல் இயக்குநராகவும், தேசிய பாதுகாப்புப் படையின் ஐ.ஜி.யாக இருந்த பி.எஸ். ஃபால்னிகர் பணி மாறுதல் மற்றும் பதவி உயர்வு பெற்று மத்திய தொழில் பாதுகாப்புப் படையின் கூடுதல் இயக்குநராகவும், எல்லைப் பாதுகாப்புப் படையின் ஐ.ஜி.யாக இருந்த சஞ்சீவ் ரஞ்சன் ஓஜா மத்திய ரிசர்வ் காவல் படையின் கூடுதல் இயக்குநராக பதவி உயர்வு அளித்து மத்திய அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.