தற்போதைய செய்திகள்

புல்வாமாவில் 2 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை

ANI

புல்வாமா மாவட்டத்தில் பாதுகாப்புப் படையினருடன் நடந்த மோதலில் 2 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டதாக பாதுகாப்பு படையினர் செவ்வாய்க்கிழமை தெரிவித்தனர்.

தெற்கு காஷ்மீரின் புல்வாமாவில் உள்ள காக்போராவில் செவ்வாய்க்கிழமை பிற்பகலில் தீவிரவாதிகள் மற்றும் பாதுகாப்புப் படையினர் இடையே துப்பாக்கிச் சூடு நடந்தது.

இந்த சண்டையில் தீவிரவாதிகள் 2 பேரை பாதுகாப்புப் படையினர் சுட்டுக் கொன்றனர். மேலும், ராணுவம், காவல்துறை மற்றும் மத்திய ரிசர்வ் காவல் படை இணைந்து இந்த துப்பாக்கிச் சூட்டை நடத்தினர். அப்பகுதியில் தொடர்ந்து தேடுதல் வேட்டை நடைபெற்று வருவதாக அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

கடந்த 24 மணி நேரத்தில் காஷ்மீரில் பாதுகாப்புப் படையினரால் சுட்டுக் கொல்லப்படும் மூன்றாவது தீவிரவாதியாகும். முன்னதாக ஷோபியன் மாவட்டத்தில் மெல்ஹோரா பகுதியில் நடந்த ஒரு மோதலில் ஒரு தீவிரரவாதி கொல்லப்பட்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பெங்களூரு பேட்டிங்; வெற்றி தொடருமா?

வரி தீவிரவாதத் தாக்குதல் செய்யும் பாஜக!: காங்கிரஸ் குற்றச்சாட்டு | செய்திகள்: சிலவரிகளில் | 29.03.2024

”கனவு காண்பது அண்ணாமலையின் உரிமை!”: கனிமொழி பேட்டி

பெங்களூரு குண்டு வெடிப்பு: தகவல் தெரிவித்தால் ரூ. 10 லட்சம்

ரம்ம்ம்மிய பாண்டியன்!

SCROLL FOR NEXT