அந்தமான் நிகோபாரில் திங்கள்கிழமை 5.1 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்தது.
இதுகுறித்து தேசிய நில அதிர்வு மையம் வெளியிட்ட அறிக்கையில்,
திங்கள்கிழமை பிற்பகல் 3.08 மணியளவில் பதிவாகியுள்ள இந்த நிலநடுக்கம் அந்தமான் நிகோபார் தீவில் ஏற்பட்டதாக நிலநடுக்கவியல் தேசிய மையம் தெரிவித்துள்ளது.
இந்த நிலநடுக்கமானது 5.1 ரிக்டர் அளவில் பதிவாகியுள்ளது.
நிலநடுக்கத்தால் இதுவரை எந்தவிதமான சேதமும், பாதிப்புகளும் ஏற்படவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.